ஜாக் கிராலியிடம் ஷுப்மன் கில் போட்ட சண்டைதான் இங்கிலாந்தை உசுப்பிவிட்டது: முகமது கைஃப் சாடல்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும் கரகோஷம் செய்து கிராலியைக் கேலி செய்தது, இந்தச் சம்பவம்தான் இங்கிலாந்தை உசுப்பி விட்டது.

Jul 16, 2025 - 16:20
 0  4
ஜாக் கிராலியிடம் ஷுப்மன் கில் போட்ட சண்டைதான் இங்கிலாந்தை உசுப்பிவிட்டது: முகமது கைஃப் சாடல்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2-வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும் கரகோஷம் செய்து கிராலியைக் கேலி செய்தது, இந்தச் சம்பவம்தான் இங்கிலாந்தை உசுப்பி விட்டது. இல்லையெனில் இந்தியா வென்றிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

எப்படி கோலி கேப்டன்சியில் கடந்த முறை லார்ட்ஸில் இங்கிலாந்து இந்திய டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களாக வீசி வீசி கோலியைக் கடுப்பேற்றி தூண்டிவிட்டு டெஸ்ட் போட்டியை வெல்ல வைத்ததோ இந்த முறை ஷுப்மன் கில் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் களத்தில் சண்டையிட்டது பென் ஸ்டோக்ஸ் படையைத் தூண்டி விட்டுள்ளது என்பது சரியான பார்வைதான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow