‘சிரியாவில் மோசமான நிலைமை’ - அசாதாரண சூழலை விவரித்த இந்தியர்
சிரியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களில் ஒருவர், அங்குள்ள அசாதாரண சூழ்நிலையை விவரித்தார். சிரியாவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லி: சிரியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களில் ஒருவர், அங்குள்ள அசாதாரண சூழ்நிலையை விவரித்தார். சிரியாவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் 13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்கு பிறகு கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அங்கு பதற்றமாக சூழல் நிலவுகிறது. இதையடுத்து சிரியாவில் தவித்த 75 இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் பத்திரமாக மீட்டது. அவர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு பேருந்தில் அழைத்து வந்தது.
What's Your Reaction?