‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ - இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து

இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார். 

Jul 15, 2025 - 20:30
 0  4
‘சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது’ - இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கருத்து

லண்டன்: இங்கிலாந்து அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய வீரர் சிராஜ் அவுட்டான விதம் துரதிருஷ்டவசமானது என அந்நாட்டு மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறியுள்ளார்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 22 ரன்களில் தோல்வியை தழுவியது. வெற்றிக்காக களத்தில் இந்தியா போராடியது எல்லோரையும் கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணியினரை மன்னர் சார்லஸை சந்தித்தார். அப்போதுதான் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோருடன் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி குறித்து மன்னர் சார்லஸ் பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow