கோவையில் பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 45’ படப் பணிகள்! 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ‘சூர்யா45’ படத்துக்கான பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இதன் மூலம் இன்று முதல் பட பணிகள் தொடங்கியுள்ளன. 

Nov 27, 2024 - 17:40
 0  7
கோவையில் பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 45’ படப் பணிகள்! 

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ‘சூர்யா45’ படத்துக்கான பூஜை புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். ‘சூர்யா 45’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow