குடும்பக் கதைகளில் முற்போக்கு சிந்தனைகளை விதைத்த வி.சேகர் ஏன் போற்றுதலுக்கு உரியவர்?
இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால் அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘காலம் மாறிப் போச்சு’ போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே. ஆனால், அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘காலம் மாறிப் போச்சு’ போன்ற படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
எளிய, நடுத்தர மக்களின் வாழ்வியலை சோக கீதம் வாசிக்காமல், அழுது வடியாமல், நகைச்சுவை கலந்து, முற்போக்கு சிந்தனைகளை படம் முழுக்க தூவி கொடுப்பது மட்டுமின்றி, அதில் தொடர்ந்து வெற்றியும் பெறுவது சாதாரணம் அல்ல. அதனை கச்சிதமாக நிகழ்த்தி காட்டியவர் வி.சேகர்.
What's Your Reaction?