கிளர்ச்சியாளர்கள் டாமஸ்கஸை கைப்பற்றியதால் அதிபர் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறினார் - ரஷ்யா தகவல்

அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான உத்தரவினை வழங்கி விட்டு சிரிய அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 

Dec 8, 2024 - 20:15
 0  4
கிளர்ச்சியாளர்கள் டாமஸ்கஸை கைப்பற்றியதால் அதிபர் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறினார் - ரஷ்யா தகவல்

மாஸ்கோ: அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு சிரிய அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுதையில், "அதிபர் பஷார் ஆசாத் மற்றும் சிரிய அரபு குடியரசு பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டுவந்த குழுக்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தனது அதிபர் பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார், அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow