காசாவை கைப்பற்றும் முடிவுக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் - அடுத்து என்ன?
“நாங்கள் எங்களை விடுவித்துக் கொள்ள விரும்புகிறோம். காசா மக்களை ஹமாஸின் கோரமான பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க விரும்புகிறோம். காசாவை நாங்களே வைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், அங்கே பாதுகாப்பு வளையத்தை உருவாக்க விரும்புகிறோம். காசாவை ஆட்சி செய்யவும் விரும்பவில்லை.” என்று சூசக உரையாற்றியுள்ளார் நெதன்யாகு.

காசாவை முழுமையாகக் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்மொழிந்த முடிவுக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சீனா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
எதிர்ப்புகளை சமாளித்துவிடலாம் என்ற நோக்கில் இஸ்ரேல் தனது ‘ஆக்கிரமிப்பு’ நடவடிக்கையை அரங்கேற்றவும் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் நடவடிக்கை, காசாவின் நிலை, சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு, உள்நாட்டில் நிலவும் ஆதரவு, எதிர்ப்பு ஆகியனவற்றை தெளிவாகப் பார்ப்போம்.
What's Your Reaction?