காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு
காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

புதுடெல்லி: காசாவில் திங்கட்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவர். இதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அங்குள்ள நஸர் மருத்துவமனையில் இன்று (ஆக.25) மட்டும் இரண்டு முறை தாக்குதல் நடந்துள்ளதாக காசாவில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. முதலில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை கொண்டு ட்ரோன் தாக்குதலும், பின்னர் ஏவுகணை தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல்.
What's Your Reaction?