கனவு பற்றி திருக்குறளில் மூளை நரம்பியல் ஆய்வு!
உலகப் பொதுமறையான திருக்குறளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது என்னுடைய மாபெரும் தமிழ்க் கனவு. அந்த வகையில் திருக்குறளில் கனவு பற்றி மூளை நரம்பியல் ஆய்வு இது.

உலகப் பொதுமறையான திருக்குறளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது என்னுடைய மாபெரும் தமிழ்க் கனவு. அந்த வகையில் திருக்குறளில் கனவு பற்றி மூளை நரம்பியல் ஆய்வு இது. நமது மூளை, நம் நனவான அனுபவங்களின் மூலம் நிகழ்வுகளைத் தானாகவே உருவாக்கி நம்மால் காண முடியும் என்பதைக் கனவுகள் காட்டுகின்றன.
தூக்கத்தில் நனவான அனுபவங்கள் அடிப்படையில், மூளை செயல்பாடுகளுடன் எவ்வாறு அவை தொடர்புடையவை என்பது பற்றியும் கனவு காண்பவர் ஏன் சுற்றுச்சூழலிருந்து, பெரும்பாலும் தூக்கத்தில் விடுபட்டிருப்பது பற்றியும் கனவு காண்பது மன கற்பனையுடனும் கருத்துகளுடனும் மிகவும் தொடர்புடையதா என்பது பற்றியும் வள்ளுவர் கனவு பற்றி மூளை நரம்பியல் அறிவியல் உண்மைகள் அறியப்படாத அன்றே கூறியிருப்பது வியப்பான ஒன்று. அதற்காக அதிகாரம் 122இல் கனவு நிலை யுரைத்தல் என்கிற தலைப்பில் கூறியிருப்பது விந்தை. மேலும், இவை தவிர கனவு பற்றி பொருட்பாலில் தீ நட்பு (819), இரவு (1054) என்னும் அதிகாரங்களிலும் கூறியிருக்கிறார்.
What's Your Reaction?