‘கண் படுமே பிறர் கண் படுமே வெளியே வரலாமா?’ - காத்திருந்த கண்கள்
தமிழில் அமர தீபம், மாதர்குல மாணிக்கம், உத்தமபுத்திரன், படகோட்டி ஆகிய படங்கள் முக்கியமானவை. அவர், வங்க மொழி படத்தின் பாதிப்பில், தமிழில் இயக்கிய திரைப்படம், ‘காத்திருந்த கண்கள்’.

இந்திய திரைத்துறையின் ஆரம்ப காலகட்ட வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவர் டி.பிரகாஷ் ராவ். தமிழ், தெலுங்கு, இந்தியில் 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார் அவர். அதில், தமிழில் அமர தீபம், மாதர்குல மாணிக்கம், உத்தமபுத்திரன், படகோட்டி ஆகிய படங்கள் முக்கியமானவை. அவர், வங்க மொழி படத்தின் பாதிப்பில், தமிழில் இயக்கிய திரைப்படம், ‘காத்திருந்த கண்கள்’.
அப்போதைய தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும் வங்க மொழி நாவல்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்தே உருவாக்கப் பட்டன. இதுவும் அப்படித்தான். அங்கு ‘ஸ்மிரிதி டுக்கு தக்’ என்ற பெயரில் நடத்தப்பட்டு வந்த நாடகத்தை அதே பெயரில் திரைப் படமாக்கினார்கள்.
What's Your Reaction?