கடும் வெப்பத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்க பானங்கள் அருந்தலாம்: உணவு டெலிவரி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
வீடுகளுக்கு சென்று உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை: வீடுகளுக்கு சென்று உணவு விநியோகிக்கும் ஊழியர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலில் ஓய்வெடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் உச்சத்தை எட்டியுள்ளது. அது மேலும் தீவிரமடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, பொது மக்களுக்கும், மருத்துவமனைகளுக்கும், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?