ஒரே மாதத்தில் 84 லட்சம் இந்திய கணக்குகளுக்கு தடை விதித்த வாட்ஸ்அப்
ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவில் முடக்கி உள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை: ஒரே மாதத்தில் சுமார் 84 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை இந்தியாவில் முடக்கி உள்ளது மெட்டா நிறுவனம். பயனர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக பயனர்களை கொண்டுள்ள சமூக வலைதளமாக அறியப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் பல கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?