“எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?” – அஜித்குமார் கொலை சம்பவத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி
அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?