“என் மகன் பாதுகாப்பாக இல்லை” - சஞ்சு சாம்சன் தந்தை உருக்கம்

என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள்

Jan 22, 2025 - 23:55
 0  4
“என் மகன் பாதுகாப்பாக இல்லை” - சஞ்சு சாம்சன் தந்தை உருக்கம்

கொச்சி: என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சஞ்சு சாம்சனின் தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஆறு மாதங்களுக்கு முன்பே சஞ்சுவுக்கு எதிராக அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் கேசிஏ (கேரள கிரிக்கெட் சங்கம்) ஏதோ சதித்திட்டம் தீட்டியது. எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை. எங்களால் அவர்களுடன் மோத முடியாது. என் மகன் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எந்த மாநிலமாவது என் மகனுக்கு 'சஞ்சு, எங்களுக்காக விளையாட வா' என்று ஒரு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், நான் அதற்கு தயாராக இருக்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow