உலகின் உற்பத்தி ஆலை, தொழிலாளர் சக்தி இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
உலகின் உற்பத்தி தொழிற்சாலையாகவும், தொழிலாளர் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: உலகின் உற்பத்தி தொழிற்சாலையாகவும், தொழிலாளர் சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார அமைப்பு சார்பில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் ஆண்டுதோறும் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் பங்கேற்கின்றனர். தாவோஸ் மாநாட்டுக்கு இணையாக, நெட்வொர்க் 7 மீடியா குரூப் சார்பில் கடந்த 2009-ம் ஆண்டில் இந்திய தலைமையத்துவ மாநாடு (என்எக்ஸ்டி) தொடங்கப்பட்டது.
What's Your Reaction?