உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடக்கம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை: உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகாவாட் திறனில், இரண்டு அலகுகள் உடைய அனல்மின் நிலையத்தை, ரூ.13,076 கோடியில் மின்வாரியம் அமைத்து வருகிறது. 2012-ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில். கட்டுமான பணிகள், கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உடன்குடி மின்நிலையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில், 5 கி.மீ., துாரத்துக்கு நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
What's Your Reaction?