ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடிப்புச் சம்பவம்: 4 பேர் உயிரிழப்பு, 500+ காயம் - நடந்தது என்ன?
தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெஹ்ரான்: தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள ஷாஹித் ராஜேய் துறைமுகத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஓமனில் தொடங்கிய அதே நேரத்தில், தெற்கு ஈரானில் சனிக்கிழமை இந்த வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பயங்கர வெடிப்புச் சம்பவம், எதனால் நிகழ்ந்தது என்ற உறுதியான காரணம் இதுவரை தெரியவில்லை. என்றாலும், துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
What's Your Reaction?