“இந்தியாவுக்கு ரோஹித், கோலி இடத்தை நிரப்பும் வல்லமை உண்டு” - டேரன் லேமன்

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு முடிவை கையில் எடுத்தாலும் அவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்பும் சக்தியும், திறனும் இந்திய கிரிக்கெட் அணி வசம் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார். 

Dec 31, 2024 - 16:45
 0  4
“இந்தியாவுக்கு ரோஹித், கோலி இடத்தை நிரப்பும் வல்லமை உண்டு” - டேரன் லேமன்

சிட்னி: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு முடிவை கையில் எடுத்தாலும், அவர்கள் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்பும் சக்தியும், திறனும் இந்திய கிரிக்கெட் அணி வசம் உள்ளது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் தெரிவித்துள்ளார்.

“ஓய்வு பெறுவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகத்தான வீரர்கள். அதில் மாற்றுக் கருத்து கிடையாது. இளம் வீரர்கள் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருவதை நாம் பார்க்கிறோம். அதனால் அவர்கள் ஓய்வு பெற்றாலும் அந்த இடத்தை நிரப்பும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. திறன் படைத்த இளம் வீரர்கள் இந்திய கிரிக்கெட்டில் அதிகம் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow