இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன் விற்பனை தொடக்கம்: டெல்லி, மும்பையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது.

டெல்லி: ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விற்பனையை இந்தியாவில் இன்று (செப்.19) தொடங்கி உள்ளது. இந்த போன்களை தலைநகர் டெல்லியின் சாகேத் பகுதியிலும், மும்பையின் பிகேசி-யிலும் அமைந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரில் ஆப்பிள் சாதன ஆர்வலர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி வருகின்றனர்.
கடந்த 9-ம் தேதி அன்று ஐபோன் 17 வரிசை போன்கள் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இதில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ மற்றும் ஐபோன் 17 புரோ மேக்ஸ் என நான்கு போன்கள் அறிமுகமாகி உள்ளன. ஆண்டுதோறும் ஐபோன்களை மேம்படுத்தி புதிய வெர்ஷனில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 17 அறிமுகமாகி உள்ளது.
What's Your Reaction?