இந்தியாவில் அடுத்த ஆண்டில் உலக தடகளப் போட்டி
அடுத்த உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது

டபிள்யூபிஎல் மினி ஏலம்: ரூ.1.60 கோடிக்கு தமிழக வீராங்கனை கமலினி ஏலம்
பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான மினி ஏலம் நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஜி. கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா பிரைஸை ரூ.10 லட்சத்துக்கு டெல்லி அணியும், ஆருஷி கோயில், கிராந்தி கவுட் ஆகியோரை தலா ரூ.10 லட்சத்துக்கு யு.பி. வாரியர்ஸ் அணியும் வாங்கியுள்ளன.
What's Your Reaction?