இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்: முதல் நாளில் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்து

பாரிஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகல் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் முறையை முடிவுக்கு கொண்டுவருவது உட்பட பல நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

Jan 22, 2025 - 05:00
 0  5
இந்தியா உள்ளிட்ட ‘பிரிக்ஸ்’ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல்: முதல் நாளில் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்து

டாலருக்கு பதில் புதிய கரன்சியை கொண்டுவர முயற்சித்தால் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்துக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow