இந்தியர்கள் மத்தியில் பிரபலம் அடையும் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி - என்ன ஸ்பெஷல்?
இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி இந்திய மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது.

சென்னை: இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி இந்திய மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த செயலி குறித்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2021-ல் இந்த செயலியை சோஹோ தளம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுனோல்டு செய்து வருகின்றனர். இதன் டவுன்லோடு எண்ணிக்கை இப்போது நூறு மடங்கு வேகத்தில் உள்ளது. அதாவது நாளொன்றுக்கு 3,000-லிருந்து 3.5 லட்சமாக டவுன்லோடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தச் செயலில் இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலிக்கான மாற்று என பலர் கருதுகின்றனர்.
What's Your Reaction?