இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு

இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

Mar 27, 2025 - 09:25
 0  5
இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு

புதுடெல்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகரித்து வருவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ரசித்து பருகும் பிரபல பானமான கோலி சோடா தற்போது வெளிநாடுகளில் "கோலி பாப் சோடா" என்ற பெயரில் ரீபிராண்ட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, வளைகுடா நாடுகளில் உள்ள நுகர்வோரிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. திட்டமிட்ட விரிவாக்கம் மற்றும் புதுமையான மறுஉருவாக்கம் காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. இவ்வாறு வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow