ஆஸி உடனான அரை இறுதியில் விளையாடுவாரா வருண் சக்கரவர்த்தி? - சாம்பியன்ஸ் டிராபி

ஆஸ்திரேலிய அணி உடன் இன்று துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Mar 4, 2025 - 11:50
 0  3
ஆஸி உடனான அரை இறுதியில் விளையாடுவாரா வருண் சக்கரவர்த்தி? - சாம்பியன்ஸ் டிராபி

துபாய்: ஆஸ்திரேலிய அணி உடன் இன்று துபாயில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தொடரின் குரூப் சுற்று போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா வீழ்த்த 33 வயதான வருண் சக்கரவத்தியின் சுழற்பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்த தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டியாக அது அமைந்தது. அதோடு சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய இரண்டாவது போட்டியாகவும் அமைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow