ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் ‘மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்’ மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது

இத்திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2025 - 10:00
 0  2
ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் ‘மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம்’ மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது

சென்னை: மகளிருக்கு நிதி ஆதாரம் மற்றும் நிதி சுதந்திரம் அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள, மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, இத்திட்டத்தில் சேராத பெண்கள் உடனடியாக இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதிகாரமளிக்கும் வகையில், மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் ‘மகளிர் மதிப்பு திட்டம்’ என்ற சிறுசேமிப்புத் திட்டம் கடந்த 2023 மார்ச் 31-ம் தேதி தொடங்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow