‘ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ - கங்குலி கருத்து

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 

Jul 27, 2025 - 22:25
 0  3
‘ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும்’ - கங்குலி கருத்து

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும் என தனது கருத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்யும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் 14-ம் தேதி அன்று இரு அணிகளும் துபாயில் நடைபெறும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடுகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow