“அவர்களின் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்” - ரோஹித், கோலி குறித்து கம்பீர் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

Oct 14, 2025 - 21:55
 0  2
“அவர்களின் அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்” - ரோஹித், கோலி குறித்து கம்பீர் கருத்து

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.

இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்தச் சூழலில் அவர்களது அனுபவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அவர்கள் இருவரும் எதிர்வரும் 2027 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்பது குறித்தும் கம்பீர் பேசியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow