அருந்ததி: மகா புனிதவதியான கதை!

விடுதலைக்கு முந்தைய தமிழ் சினிமாவில், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வெளியாயின.

Jul 3, 2025 - 11:00
 0  3
அருந்ததி: மகா புனிதவதியான கதை!

விடுதலைக்கு முந்தைய தமிழ் சினிமாவில், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் அதிகமாக வெளியாயின. அப்படி வந்த திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றதால் அதுபோன்ற படங்கள் தொடர்ந்து உருவாயின. அதில் ஒன்று ‘அருந்ததி’.

முற்பிறப்பில் சண்டிகை என்ற பெயரில் பிறக்கும் அருந்ததி, வசிஷ்டரின் மனைவியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள் வழக்கம்போல் அட்சதை செய்வதை மறந்து சமையல் வேலையில் பரபரப்பாக இருக்கிறார் சண்டிகை. வசிஷ்டர் அட்சதைக் கேட்டதும் வேகமாக ஓடி, அங்கு தேங்கியிருந்த அசுத்த நீரில் அட்சதை தயாரிக்கிறார். இதையறிந்த வசிஷ்டர், சண்டிகையை வெறுத்து வெளியேறுகிறார். கணவர் பிரிந்து சென்றதால் தற்கொலைக்கு முயல்கிறார் சண்டிகை. அப்போது அங்கு தோன்றிய சிவன், சண்டிகையை மீண்டும் பிறந்து வந்து வசிஷ்டரை மணந்து கொள்ளும்படி வரம் கொடுக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow