அமெரிக்கா - சீனா வர்த்தப் போரில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் - பட்டியலிட்டு விளக்கும் ரகுராம் ராஜன்!
அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் இந்திய பொருளாதாரத்துக்கு சில சாதகமான சூழல் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி: அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போரில் இந்திய பொருளாதாரத்துக்கு சில சாதகமான சூழல் இருப்பதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி என்பது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் சிறியதுதான். ஆம், இந்த வரிவிதிப்புகளின் மூலம் சில விளைவுகள் ஏற்படும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கடினமான சூழலை உருவாக்கும். ஆனால் நமது பொருளாதாரத்தின் தன்மையையும் நமது வளர்ச்சியையும் அது பெரியளவில் மாற்றப் போவதில்லை.
What's Your Reaction?