அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

கூவத்தூரில் நாளை (ஆக.23) நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற ம் மறுப்பு தெரிவித்துள்ளது

Aug 22, 2025 - 17:20
 0  3
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சென்னை: கூவத்தூரில் நாளை (ஆக.23) நடைபெற உள்ள இசையமைப்பாளர் அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கூவத்தூர் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி எனும் இடத்தில் ‘ஹுக்கும்’ எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான அதிகார பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டிருந்தார். பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனையும் நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow