அதிபர் ட்ரம்ப் - மஸ்க் மோதல் காரணமாக டெஸ்லா பங்கு விலை வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.
What's Your Reaction?