அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Jul 28, 2025 - 07:45
 0  5
அடுத்த ஆண்டு முதல்  வெளி சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின் வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் 5 ஆண்டுகளுக்கு வெளிச்சந்தைகளில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின் தேவை அதிகரிக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அதிகபட்ச மின் தேவை 20,830 மெகாவாட்டாக பதிவானது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின் தேவை அதிகரிக்கும் என கப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின் தேவை அதிகரிக்கவில்லை. மேலும் 2026 27-ம் ஆண்டில் தமிழகத்தின் மின் தேவை 23 ஆயிரம் வாட்டாக அதிகரிக்கும் கணக்கிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow