Toxic Panda: ஆண்ட்ராய்டு போன்களை தாக்கி பணத்தை களவாடும் மால்வேர்
ஆண்ட்ராய்டு பயனர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை களவாடும் நோக்கில் ‘டாக்சிக் பாண்டா’ என்ற புதிய மால்வேர் உலாவி வருவதை குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சென்னை: ஆண்ட்ராய்டு பயனர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை களவாடும் நோக்கில் ‘டாக்சிக் பாண்டா’ என்ற புதிய மால்வேர் உலாவி வருவதை குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் இந்த மால்வேர் குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். ஆண்ட்ராய்டு பயனர்களின் போன்களில் இந்த மால்வேர் பாதிப்பின் மூலம் பயனர்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுகிறது. அக்கவுண்ட் டேக்ஓவர், ஆன்-டிவைஸ் பிராடு போன்ற டெக்னிக் இதற்கு பயன்படுத்தப்படுகிறது என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?