IPL மெகா ஏலம் | ரிஷப் பண்ட் - ரூ.27 கோடி, ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26.75 கோடி, அர்ஷ்தீப் - ரூ.18 கோடி!
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றுள்ள 574 வீரர்களில் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆறு வீரர்களில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.

ஜெட்டா: ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றுள்ள 574 வீரர்களின் முதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆறு வீரர்களில் ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்று வரும் ஏலத்தில் 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் முதல் வீரராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது.
What's Your Reaction?