ENG vs IND டெஸ்ட் தொடர் - டியூக்ஸ் பந்து குறித்து ரிஷப் பந்த் அதிருப்தி!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த். 

Jul 10, 2025 - 11:30
 0  9
ENG vs IND டெஸ்ட் தொடர் - டியூக்ஸ் பந்து குறித்து ரிஷப் பந்த் அதிருப்தி!

லண்டன்: இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 சமனில் உள்ளது. இன்று லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்த தொடரின் 3-வது போட்டி தொடங்குகிறது. இந்நிலையில், டியூக்ஸ் பந்துகள் தரம் குறித்து ரிஷப் பந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow