50-வது வருடத்தில் ‘ரகசியம் பரம ரகசியம்’!
ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடித்து வரும் நாடகம், ‘ரகசியம் பரம ரகசியம்’. இதன் கதையை வெங்கட் எழுதியுள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி நடித்து வரும் நாடகம், ‘ரகசியம் பரம ரகசியம்’. இதன் கதையை வெங்கட் எழுதியுள்ளார். முதன்முதலாக 1975-ம் ஆண்டு ‘யுஏஏ’ குழுவால் அரங்கேற்றப்பட்ட இந்த நாடகத்தை இப்போது வரை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார். இப்போதுவரை அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் 50-வது ஆண்டை முன்னிட்டு இந்த நாடகம் சமீபத்தில் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் காந்த் கலந்து கொண்டு, நாடகக் குழுவினரை வாழ்த்தினார்.
What's Your Reaction?