38-வது தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில் குமார்

38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

Feb 4, 2025 - 09:25
 0  5
38-வது தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் தங்கம் வென்றார் வேலவன் செந்தில் குமார்

டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான பளுதூக்குதலில் +109 கிலோ எடை பிரிவில் தமிழகத்தின் எஸ்.ருத்ராமயன் 355 கிலோ (ஸ்நாட்ச் 175 + கினீன் அன்ட் ஜெர்க் 355) எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் அவர், தேசிய சாதனையை படைத்தார்.

ஸ்குவாஷில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார் தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், மகாராஷ்டிராவை சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow