“சிவகார்த்திகேயன் தானாக முன்வந்து உதவினார்” - வயநாடு வெள்ளத்தில் வீட்டை இழந்த கிரிக்கெட்டர் சஜனா நெகிழ்ச்சி
வயநாடு வெள்ளத்தில் வீடு, தனது பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் கேட்காமலேயே உதவி செய்ததாக கனா திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார்.

வயநாடு வெள்ளத்தில் வீடு, பதங்கங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை இழந்திருந்த தனக்கு நடிகர் சிவகார்த்திக்கேயன் தானக முன்வந்து உதவி செய்ததாக ‘கனா’ திரைப்பட நடிகையும், கிரிக்கெட் வீராங்கனையுமான எஸ்.சஜனா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுச் செய்தி ஊடகம் ஒன்றுக்கு சஜனா அளித்துள்ளப் பேட்டியில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அந்த ஊடகம் தனது எக்ஸ் பக்கத்தில் சிவகார்த்திக்கேயன் உதவியத் தகவலை குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2024 ஐபிஎல் வெற்றி, தனது விளையாட்டு வாழ்வு பற்றி சஜனா அளித்துள்ள அந்த நீண்ட பேட்டியில், “2018 வயநாடு வெள்ளத்தின்போது தனது வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அதில் நான் வாங்கிய கோப்பைகள், மெடல்கள், விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்தக் கையறு நிலைதான் நான் எத்தனை ஆதரவான சூழலில் உள்ளேன் என்பதை உணர்த்தியது. பல எதிர்பாராத உதவிகளையும் பெற்றுத் தந்தது.
What's Your Reaction?